பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
ஒருமுறை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் முன்னால் வந்த ஒருவரின் உடைகள் தரமற்றதாகவும், சாதாரணமாகவும் இருந்தன.அண்ணலார் அவரிடம், ""உங்களிடம் நிறைய பணம் இருக்கிறதல்லவா? என்றார். அவர், "ஆம் என்றார்.""என்னென்ன வகையான சொத்து உங்களிடம் இருக்கிறது, என்ற நபிகளாரிடம், ""அண்ணலே! என்னிடம் ஒட்டகங்கள், குதிரைகள், ஆடுகள், அடிமைகள் என ஏராளமான சொத்துக்கள் உள்ளன, என்றார். ""இறைவன் உங்களுக்கு இவ்வளவு சொத்துக்கள் கொடுத்திருக்கிறான் என்றால், அவனது அருளின் அடையாளம் உங்கள் உடலில் வெளிப்பட்டிருக்க வேண்டும், என்று நாயகம்(ஸல்) அவர்கள் சூசகமாக பதில் அளித்தார்கள்.அதாவது, ஆண்டவன் செல்வத்தை வாரி வழங்கியிருந்தும், அதைப் பயன்படுத்தாமல் பூட்டி வைப்பதில் லாபம் ஏதுமில்லை என்பது அவர்களது கருத்தாக அமைந்தது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ""நீங்கள் விரும்புவதை சாப்பிடலாம். விரும்பும் ஆடையை அணியலாம். ஆனால், கர்வமும், வீண் விரயமும் இருக்கக்கூடாது, என்றும் சொல்கிறார்கள். இறைவன் கொடுத்ததை கர்வமின்றி அனுபவிக்க வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26