Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஸ்லாமிய சிந்தனைகள்: பாதுகாப்பு ... இந்து-முஸ்லிம் மக்கள் இணைந்து மதநல்லிணக்க திருவிழா! இந்து-முஸ்லிம் மக்கள் இணைந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
10:07

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா, நேற்று ஆடி அஸ்வினியுடன் விழா துவங்கியது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.

சிறப்பு பூஜைகள்: திருத்தணி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாவான ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று அஸ்வினி நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, மூலவர் முருகப் பெருமானுக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பச்சை மாணிக்க மரகத கல், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில், வள்ளி, தெய்வானை, துர்க்கை, உற்சவர், சண்முகர் மற்றும் ஆபத்சகாய விநாயகர் ஆகிய சன்னிதிகளிலும் சிறப்பு பூஜை நடந்தது. இந்த விழாவில்,
தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். சில, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்து, சரணவ பொய்கையில் புனித நீராடி, பக்தி பாடல்கள் பாடியவாறு மலைப் படிகள் வழியாக நடந்து சென்று மூலவரை வழிபட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு: பக்தர்கள் நெரிசல் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விரைவு தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) திருமகள் மற்றும் கோவில் ஊழியர் செய்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar