Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி கிருத்திகை விழாவில் அந்தரத்தில் ... திருவாரூர் தியாகராஜர் கோயிலில்  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி துவக்கம் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிறைபுத்தரி பூஜை: சபரிமலை நடை திறப்பு : ஆக., 17ல் புதிய தந்திரி பொறுப்பேற்பு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஆக
2013
10:08

சபரிமலை : நிறைபுத்தரி பூஜைக்காக, சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை, நிறைபுத்தரி பூஜை நடைபெறுகிறது. ஆக., 17ல், புதிய தந்திரியாக, கண்டரரு மகேஸ்வரரு பொறுப்பேற்கிறார்.
திருவிதாங்கூர் அரண்மனை : கேரள மாநிலம், சபரிமலையில், ஆடி மாதம், நிறைபுத்தரி பூஜை நடைபெறும். சபரிமலையில் எல்லா பூஜைகளும் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டாலும், நிறைபுத்தரி பூஜை, குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன், திருவிதாங்கூர் அரண்மனையில் முடிவு செய்து, தேவசம் போர்டுக்கு அறிவிக்கப்படுகிறது.அதன்படி, நாளை காலை, 5:45 மணிக்கு, ரோகிணி நட்சத்திரத்தில், நிறைபுத்தரி பூஜை நடைபெறுகிறது. இதற்காக, சபரிமலை நடை, நேற்று மாலை, 5:30 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி தாமோதரன் போற்றி, நடை திறந்து, தீபம் ஏற்றினார். வேறு எந்த விசேஷ பூஜைகளுமின்றி, இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், கணபதிஹோமம் நடைபெறும்.
நெற்கதிர் கட்டுகள் : தொடர்ந்து, அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகள், கோவில் முன்புறம் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு, தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை செய்வார். அதை, மேல்சாந்தி தலையில் சுமந்து, கோவிலை வலம் வருவார். கோவிலில் நெற்கதிர்கள் பூஜிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிராசதமாக வழங்கப்படும். பின், நெய் அபிஷேகமும், வழக்கமான பூஜைகளும் முடிந்து, இரவு, 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும். கடந்த ஒரு ஆண்டாக, சபரிமலையில் தந்திரி பொறுப்பு வகித்து வந்த, கண்டரரு ராஜீவரரு, இன்றைய பூஜையுடன் பதவி காலத்தை நிறைவு செய்யும் நிலையில், தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு, ஆக., 17ல் பொறுப்பேற்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட எல்லா விசேஷ நாட்களிலும் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar