Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா பரதீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தனக் காப்புடன் சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2013
11:08

ஆர்.கே.பேட்டை:பன்னீர், துளசி மாலை மற்றும் சந்தனக்காப்புடன் சுந்தரராஜ பெருமாளுக்கு, திருமஞ்சனம் நேற்று நடந்தது.ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள, சுந்தரராஜ பெருமாள் கோவிலில் தான் வியாச முனிவருக்கு, அவருடைய ஆசிரமத்தில் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார். மேலும், அகல்யாவிற்கு சாப விமோசனம் அளித்த சிறப்பும் உண்டு. பல ஆண்டுகளாக பராமரிக்காமல் இருந்த, இக்கோவில், திருப்பதி தேவஸ்தானத்தின் பங்களிப்புடன், கடந்த 1987ல் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், மார்கழி வழிபாடு மற்றும் ஆடி பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பவித்ரோற்சவம் மேதினி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு, உற்சவர் சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து, பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் உற்சவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், சந்தனக் காப்புடன் துளசி மாலை அணிவித்தும் திருமஞ்சனம் நடந்தது. இதில், சுற்றியுள்ள வைணவ கோவில்கள் சேர்ந்த வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு, மந்திரங்களை ஓதினர். மாலை, 6:00 மணிக்கு உற்சவர் கோவில் வளாகத்தில் எழுந்தருளினார். நாளை ஸ்தாபன திருமஞ்சனமும், அக்ஷாதாரோபணமும் நடக்கிறது. இரவு ஏகாந்த சேவையுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 
temple news
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.பிப். 27ல் முழுவீரன் ... மேலும்
 
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar