Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா பரதீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தனக் காப்புடன் சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2013
11:08

ஆர்.கே.பேட்டை:பன்னீர், துளசி மாலை மற்றும் சந்தனக்காப்புடன் சுந்தரராஜ பெருமாளுக்கு, திருமஞ்சனம் நேற்று நடந்தது.ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள, சுந்தரராஜ பெருமாள் கோவிலில் தான் வியாச முனிவருக்கு, அவருடைய ஆசிரமத்தில் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார். மேலும், அகல்யாவிற்கு சாப விமோசனம் அளித்த சிறப்பும் உண்டு. பல ஆண்டுகளாக பராமரிக்காமல் இருந்த, இக்கோவில், திருப்பதி தேவஸ்தானத்தின் பங்களிப்புடன், கடந்த 1987ல் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், மார்கழி வழிபாடு மற்றும் ஆடி பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பவித்ரோற்சவம் மேதினி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு, உற்சவர் சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து, பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் உற்சவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், சந்தனக் காப்புடன் துளசி மாலை அணிவித்தும் திருமஞ்சனம் நடந்தது. இதில், சுற்றியுள்ள வைணவ கோவில்கள் சேர்ந்த வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு, மந்திரங்களை ஓதினர். மாலை, 6:00 மணிக்கு உற்சவர் கோவில் வளாகத்தில் எழுந்தருளினார். நாளை ஸ்தாபன திருமஞ்சனமும், அக்ஷாதாரோபணமும் நடக்கிறது. இரவு ஏகாந்த சேவையுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar