Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி மாரியம்மான் கோயிலில் ... அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம் அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூரத் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஆக
2013
10:08

திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு ஆக, 9 தேரோட்டம் நடந்தது. ஆண்டாள் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்து திருக்கோஷ்டியூரிலும் இந்த உற்சவம் ஆடியில் நடைபெறுகிறது. ஜூலை 30,காலை கொடியேற்றப்பட்டு,மாலையில், ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் காப்புக்கட்டப்பட்டு, 10 நாள் உற்சவம் துவங்கியது. தினமும் இரவில் தங்கப்பல்லக்கில் ஆண்டாள், பெருமாள் திருவீதி உலா நடந்தது. ஆடிப்பூர உற்சவத்தின் பத்தாம் திருநாளை முன்னிட்டு,ஆக, 9, காலை 10 மணிக்கு பெருமாளும்,ஆண்டாளும் தேரில் எழுந்தருளினர். மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. என்.வைரவன்பட்டியில் வயிரவசுவாமி மகாஉற்சவத்தை முன்னிட்டு,ஆக, 9 தேரோட்டம் நடந்தது.நகர வயிரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மை கோயிலில் எழுந்தருளியுள்ள வயிரவருக்கு, ஆடியில் நடைபெறும் மகா உற்சவம், ஆக.,1ல் காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.தினசரி காலையில்,வெள்ளிரதத்தில் சுவாமி புறப்பாடும்,இரவில், வாகனங்களில், பைரவர் திருவீதி உலாவும் நடந்தது.ஆக, 9, ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு,காலை 8 மணிக்கு தேரில்பைரவர் எழுந்தருளினார். மாலை 5.15 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் நடந்தது. ஆக, 11 காலை 8 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.இரவு 8 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமிதிருவீதி உலா நடைபெறும்.ஆக.,11ல் காலை 9 மணிக்கு தீர்த்தவாரி,மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar