திருச்சி - உறையூர் பகுதியில் அமைந்துள்ளது வெக்காளியம்மன் ஆலயம். பக்தர்கள், தங்களது பிரச்னைகளை கோரிக்கைச் சீட்டில் எழுதி, அம்மனின் பாதத்தில் வைத்து மனதார வழிபட்ட பின்னர், அம்மன் முன்புள்ள சூலத்தில் கட்டிவிட்டு வந்தால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆவணி மாதம் இங்கு நடைபெறும் மகா சர்வ சண்டி ஹோமத்தில் கலந்து கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.