Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண் பெற்ற பயன் நந்தி வழிபாடு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
04:08

*மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். அவர்களின் பாராட்டுக்காக ஆசைப்படாதே.
*சித்திரவதை செய்யப்படும் வேளையிலும் கூட, ஒருவன், தனக்கு துன்பம் இழைப்பவனிடமும் கடவுளைக் கண்டான் என்றால் அதுவே பரமஞானம்.
*விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே. எப்போது அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அவரே நன்கு அறிவார்.
*உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் இருக்கும் தீமையை அகற்றுவது அவர் பணியாகட்டும்.
*நல்ல லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு, கடமையில் ஆர்வத்தோடு ஈடுபடு. அதற்காகத் தான் மனிதனாக இங்கு வந்திருக்கிறாய். இதை உணர்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.
*கடவுளின் கண்ணுக்கு அற்பமான பொருள் என்று எதுவும் கிடையாது. அதுபோல, உன் கண்ணிலும் அற்பமானது என்று எதுவும் இருக்கக் கூடாது.
*ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் உன்னுள் இருக்கும் கடவுளுக்கு நீ அளிக்கும் காணிக்கையாக இருக்கட்டும்.
*சோர்வு உன்னைச் சோர்வடைய விட்டுவிடக் கூடாது. அதிலிருந்து விலகிநின்று, அதன் மூலகாரணத்தைக் கண்டறிந்து அழிக்க முயற்சி செய்.
*உத்தமமான பெரிய செயல்களைச் செய்ய நினைத்தால், உடனடியாகச் செய்து விடுவதே நல்லது.
*உன்னால் முடிந்தால் வரை மற்றவர்களைக் கைதூக்கிவிடு. அவர்களின் ஆற்றலை இழந்து போகும் படி செய்து விடாதே.
*ஒருவன் பாவி என்பதற்காக, அவனை வெறுப்பது கூட பாவம் தான். இதன் மூலம் கடவுளின் வெறுப்புக்கே ஆளாகிவிட நேரும்.
*உன்னை நீயே இரக்கமின்றி ஆராய்ச்சி செய். அப்போது தான் நீ, பிறர் மீது இரக்கமும், பரிவும் காட்டத் தொடங்குவாய்.
*கண்களைத் திறந்து பார். உலகம் எப்படிப்பட்டது, கடவுள் எத்தகையவர் என்ற உண்மையைக் கண்டுமகிழ்வாய். பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டுவிடு.
*உன் நம்பிக்கைகளை அறிவு என்றும், பிறருடைய நம்பிக்கைகளை பிழை என்றும் எண்ணாதே.
*உயிர்கள் மீது இரக்கம் காட்டு. ஆனால், அவற்றுக்கு அடிமை ஆகிவிடாதே. கடவுள் ஒருவருக்கு மட்டுமே அடிமையாக இரு. அவர் எங்கிருக்கிறார் என உன் அகக்கண்களால் உணர முயற்சி செய்.
*வறுமையை ஒழித்து விட்டால், மனிதவாழ்வு மகிழ்ச்சியும், மனநிறைவும் பெற்றதாகி விடும் என கனவு காணாதே.
*மனச்சுத்தம் உள்ளவன், எதைக் கண்டும் பயம் கொள்ளத் தேவையில்லை.
*கடவுளை நேசிக்கப் பழகு. இல்லாவிட்டால் அவரை உன்னிடம் போரிடவாவது செய்ய வை.
*செல்வத்தை பறை சாற்றிப் பெருமை கொள்ளாதே. தன்னடக்கத்தையும் பிறர் புகழவேண்டும் என்று எதிர்பார்க்காதே.
*அகந்தை, அறியாமையை அறவே ஒழித்தால் மட்டுமே கடவுளை அறிய முடியும். அதற்காக, பயனற்ற வறட்டு வேதாந்த வலைகளில் சிக்கிக் கொள்ளாதே.
-அரவிந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar