Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் பூஜைக்கு முழங்கிய ... சமண வரலாற்றுத் தலங்களை அறிய உதவும் விருட்சத் திருவிழா! சமண வரலாற்றுத் தலங்களை அறிய உதவும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைவரும் திருத்தணி முருகனை அருகே தரிசிக்கலாம்.. பக்தர்கள் மகிழ்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஆக
2013
10:08

திருத்தணி: முருகன் மலைக்கோவிலில், பல ஆண்டுகளாக அமலில் இருந்த, தொலைதூர தரிசனம் நீக்கப்பட்டுள்ளது. தற்போது, மூலவரை அருகில் இருந்து, தரிசிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு,  தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய், சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டும், மூலவர் அருகில் (நான்கு அடி தூரத்தில்) நின்று மூலவரை தரிசிக்கலாம். 25 ரூபாய் மற்றும் இலவச தரிசனத்தில், பக்தர்கள் மூலவரை தரிசிப்பதற்கு தொலை தூரம் (12 அடி தூரத்தில்) தரிசனத்திற்கு அனுமதித்து வந்தனர். மலைக்கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும்(இலவச தரிசனம்) மூலவர் அருகில் நின்று தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், முதல் முறையாக திருத்தணி முருகன் கோவிலில், தொலை தூர தரிசனத்தை ரத்து செய்து, சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களும், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களும் ஒரே இடத்தில், மூலவருக்கு அருகில், அதாவது நான்கு அடி தூரத்தில் இருந்து சுவாமி தரிசிப்பதற்கு அனுமதி அளித்தார். ஆணையரின் உத்தரவை தொடர்ந்து, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) திருமகள், ஆகியோர் துணையுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தொலை தூர தரிசனத்திற்கு பதில், (இலகு) அருகில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.  தற்போது, சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மற்றும் இலவச தரிசனத்திற்கு வரும், பக்தர்கள் சமம் என்ற முறையில், மூலவர் நுழைவு அருகில், நான்கு வரிசையில், இருந்து பக்தர்களை ஒன்றாக இணைந்து மூலவர் அருகில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நடைமுறைக்கு, அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar