Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூணூல் போடுவதற்கு குறைந்தபட்ச வயது ... சூரிய நமஸ்காரம் போல் சந்திர ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழும் வரை போராடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2013
12:08

*நீ உன்னுடைய வேலையை இறைவனுக்கு நைவேத்யமாக அர்ப்பணித்து விட்டால், தியானம் என்பதே தேவையில்லை. உன் பணியில் நீ செலுத்தும் கவனம் தியானத்தை விட உயர்ந்தது.
*மேகக்கூட்டம் போல் சிரமங்கள் சூழ்ந்தாலும், அவற்றை உன் இதழ்களில் தவழும் புன்சிரிப்பு என்னும் சூரியன் காணாமல் செய்துவிடும்.
*ஆர்வம், விழிப்புணர்வு ஒருவனிடம் இருந்து விட்டால், ஒவ்வொருநாளும் அவன் லட்சியத்தை நெருங்கிக் கொண்டிருப்பான்.
*பிறர் விஷயங்களில் ஒருபோதும் தலையிட விரும்பாதே. கேட்காமல் யாருக்கும் ஆலோசனை வழங்காதே.
*பணியிலுள்ள சிரமத்தைப் பற்றி தொல்லைப்பட்டுக் கொள்ளாதே. மனதில் சாந்தம் எப்போதும் நிலவும்படி செய்.
*பேசாதே, செயல்படு... இதை உன் மனதில் குறித்துக்கொள். வார்த்தைகள் ஒருபோதும் தேவையில்லை. செயலே வாழ்வின் ஆதாரம்.
*தன்னம்பிக்கையுடன் இரு. நேர்மையோடு பிரார்த்தனை செய். நீ கேட்டதை இறைவன் தவறாமல் தந்தருள்வார்.
*தாமதமாக தோன்றும் இரக்கம் பாராட்டுக்கு உரியதல்ல. தக்க நேரத்தில் உன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவிடு.
*அச்சம் என்பது பெரும்மாசு. அற்பமானதும், பலவீனமானதுமான சிறுமைக்கு வாழ்வில் இடமளிக்காதே. நீ இறைவனுக்குச் சொந்தமானவன். எதைக் கண்டும் பயப்படத் தேவையில்லை.
*வாழ்வின் வெற்றி என்பது, ஒருவன் உண்மையைக் கடைபிடிப்பதைப் பொறுத்தது.
*நேர்மையாக இருப்பது போல பாசாங்கு செய்யாதே. தன்னை செம்மைப்படுத்திக் கொண்டு நேர்மையை வளர்த்துக் கொள்வதே சிறந்தது.
*பலசாலிகள் வெற்றியைத் தேடி ஓடுவதில்லை. அது தங்களைத் தேடி வரும்போதே ஏற்றுக் கொள்வார்கள்.
*மற்றவர்கள் உங்களிடம் நல்லவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நல்லவர்களாக இருக்கக் கூடாது. நல்லவனாக இருப்பதற்காகவே, நீ நல்லவனாக இரு.
*நோய் எதுவுமே கடுமையானது அல்ல. மருத்துவர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. நீ ஏற்றுக்கொண்டாலன்றி அந்த நோய் உன்னை எதுவும் செய்ய முடியாது. நோயாளியின் நம்பிக்கை தான் குணமடையும் ஆற்றலைத் தரும் அருமருந்து.
*எவ்வளவு தூரம் கடவுளை நம்புகிறாயோ, அவ்வளவு தூரம் உன் துன்பங்கள் உன்னை விட்டு பறந்தோடும்.
*வாழ்வில் சாதிக்க விரும்புபவனுக்கு ஒருமுகப் படுத்தும் திறன் அவசியம். ஒரு மனிதனின் மதிப்பு அவனுடைய கவனசக்தியை பொறுத்ததே.
*முன்னேறுவதற்காகவே நீ பிறந்திருக்கிறாய். அதனால், வாழ்வில் நீ எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
*கோபத்தை அடக்கு. முரட்டுத்தனம் கண்ணீரில் தான் முடியும். எந்தச் சூழலிலும் மனம் கலங்காமல் அமைதியுடன் இரு.
*நீ பிறர் மீது ஆட்சி செலுத்த வேண்டுமானால் உன் மீது நீ ஆட்சி செலுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
*லட்சியவாதி தன் குறிக்கோளை தம்பட்டம் அடிக்க மாட்டான். தான் செய்து முடித்ததை பிறர் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டான்.
*துணிவு மிக்கவன் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும், இறுதிவரை வெற்றிக்காக போராடிக் கொண்டிருப்பான். நல்வழி நிச்சயம் அவனுக்கு கிடைத்திடும்.
-ஸ்ரீஅன்னை

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar