சூரியன் கண்களுக்கு ஒளி தருபவர். சந்திரன் நட்சத்திரம் போன்ற மற்றவற்றிற்கு ஒளி தருபவர். சூரியனைத் தவிர மற்றைய கிரகங்களுக்கு தாமே ஒளி வீசும் சக்தி கிடையாது. எனவே, தான் மற்றைய கிரகங்களின் தலைவராக அவர் போற்றப்படுகிறார். அன்றாடம் உலக இயக்கத்தைத் துவங்குபவர். பார்வை சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உடையவர். எனவே, சூரிய நமஸ்காரத்தை ஒழுங்காகச் செய்தாலே, சந்திரன் முதலிய மற்ற கிரகங்களுக்கும் நமஸ்காரம் செய்த பலன் கிட்டும்.