பதிவு செய்த நாள்
06
செப்
2013
11:09
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில், ஆவணி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு நிகும்பலா யாகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், பாதூரில், அபிதகுசலாம்பிகை வலமுறை அகத்தீஸ்வர சுவாமி கோவிலில், ஆவணி அமாவாசையான நேற்று, நிகும்பலா யாகம் நடந்தது. காலை, 10:30 மணிக்கு யாகம் துவங்கி, சிறப்பு பூஜை நடந்தது. பகல், 11:45 மணிக்கு யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டினர். நெய், பழ வகைகள், பால் யாக குண்டத்தில் ஊற்றப்பட்டது. பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றக் கோரி, வெற்றிலையில் எழுதி கொடுத்தனர். அதை, யாக குண்டத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொட்டினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.