பதிவு செய்த நாள்
07
செப்
2013
10:09
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், மாதம் தோறும் உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம், கடந்தமாதம், ஆடிகடைசி வெள்ளிப் பெருந்திருவிழா நடந்து முடிந்தநிலையில், நேற்று முன்தினம் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை விருதுநகர் உதவி ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, கோயில் செயல் அலுவலர் தனபாலன், கோயில்பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி முன்னிலையில் நடந்தது. மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றஉறப்பினர்கள், கோயில் பணியாளர்கள், அலுவலர்கள், காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். ஒரு மாத காலத்தில் 30லட்சத்து49ஆயிரத்து761 ரூபாய், 103கிராம்தங்கம் , 285 கிராம் வெள்ளி, பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது.