உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் மழை பெய்ய வேண்டி கீழப்பள்ளிவாசல், மேலப்பள்ளிவாசல் ஜமாத்துகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கீழப்பள்ளி வாசல் அருகே நடந்த தொழுகையில், கீழப்பள்ளி செயலாளர் அலாவுதீன் சேட், உமர் சகுபர், மேலப்பள்ளி ஜமால்மைதீன், இமாம்கள் சிக்கந்தர் மைதீன், சிக்கந்தர்பாட்ஷா மற்றும் பலர் பங்கேற்றனர்.