புரட்டாசி பவுர்ணமியையொட்டி மதுரை கூடழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. தேனி ஸ்ரீ காமாட்சியம்மன் ஸ்ரீசாத்தாவுராயன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.