பதிவு செய்த நாள்
23
செப்
2013
11:09
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கைலாசநாதர் மற்றும் சித்தி விநாயகர் கோவிலில், வெளிப்புற மண்டப கான்கிரீட் தளம் அமைக்க நிதி ஒதுக்கும்படி, புதுச்சேரி முதல்வருக்கு நாஜிம் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார். அதன்படி, இந்து அறநிலையத்துறை மூலமாக 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான கோப்புகள் கோவில் நிர்வாகத்திடம், வேளாண்துறை அமைச்சர் சந்திரகாசு வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., க்கள் நாஜிம்,சிவா,கோயில் தனி அதிகாரி ஆசைத்தம்பி பங்கேற்றனர். மாசுபுகை குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி காரைக்கால் மாவட்ட தேசிய மாணவர் படையின் சார்பில் உலக மாசுபுகை குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோவில்பத்து தந்தைபெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியை, எஸ்.பி.,வெங்கடசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி, பாரதியார் சாலை, திருநள்ளார் ரோடு, மாதாகோவில் விதி வழியாக சென்றது.100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் என்.சி.சி., அதிகாரி ரெங்கையன், முத்துசாமி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.