Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காந்தி கோவிலில் சிறப்பு பூஜை: ... திருப்பதி பிரமோற்சவம்: சப்தகிரி ரயிலில் கூடுதல் பெட்டிகள்! திருப்பதி பிரமோற்சவம்: சப்தகிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மண்டல மகரவிளக்கு: 17-ல் தேவசம் அமைச்சர்கள் ஆலோசனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 அக்
2013
10:10

நாகர்கோவில்: சபரிமலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல மகரவிளக்கு சீசனில் வெளி மாநில பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் தொடர்பாக ஆலோசிக்க தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில தேவசம்போர்டு அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 17-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் தக்கலையில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் இரண்டு அன்னதான மண்டபங்கள் நன்கொடையாளர்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. மரக்கூட்டத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்ட சுவாமி ஐயப்பன் ரோடு, தார் போடப்பட்டு விளக்குகள் பொருத்தப்படும். சபரிமலை செல்லும் ரோடுகள் அனைத்தையும் சீரமைக்க 153 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு தனி குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு வருகிறது. இதனை வரும் 24-ம் தேதி முதல்வர் உம்மன்சாண்டி திறந்து வைக்கிறார். அன்றைய தினம் பம்பையில் அனைத்துத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும். இந்த ஆண்டு நிலக்கல்லில் எட்டாயிரம் வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சன்னிதானம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. சபரிமலை மாஸ்டர் பிளானை செயல்படுத்த வசதியாக அரசு 25 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. அரசு நேரடியாக சபரிமலைக்கு நிதிஒதுக்குவது இது முதல் முறையாகும். சன்னிதானத்தில் பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டு தளங்கள் வரும் சீசனுக்கு முன்னர் தீர்க்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீஸ் துறை மூலம் செயல்படுத்தப்பட்ட ஆன்லைன் முன்பதிவு இந்த ஆண்டு மேலும் விரிவு படுத்தப்படும். வரும் 17-ம் தேதி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநில தேவசம்போர்டு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. நிலக்கல்லில் இம்மாநிலங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது. இதில், கர்நாடகா இடத்தை பெற்று கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது. இம்மாநில அரசு சார்பில் இங்கு ஆயிரம் கழிவறைகள் கட்டப்படுகிறது. புகார்களில் சிக்கி தற்போது கோர்ட்டில் விடுதலையாக்கப்பட்டுள்ள கண்டரரு மோகனரருவுக்கு மீண்டும் தந்திரி பதவி கொடுப்பது பற்றி தேவசம்போர்டு முடிவு செய்யும். இதில் அரசு எந்த பரிந்துரையும் வழங்குவதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar