பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
பழநி: ஆந்திரா மாநில பிரச்னையால், புரட்டாசி பிரம்மோற்சவ விழாவிற்காக, பழநியிலிருந்து திருமலைக்கு பூக்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவிற்கும், பழநி புஸ்ப கைங்கர்யா சபா மூலம், நிலக்கோட்டை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளிலிருந்து பூக்கள் பெறப்பட்டு, திருப்பதிக்கு டன் கணக்கில் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாண்டும் பூக்கள் அனுப்பி வைக்க சபா மூலம் ஏற்பாடுகள் நடக்கிறது. தற்போது, தனித்தெலுங்கானா பிரச்னையால், திருப்பதியில் போக்குவரத்து பிரச்னை உள்ளது. இதன் காரணமாக பழநியிலிருந்து திருமலைக்கு பூக்கள் அனுப்பி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சபா பொருளாளர் மருதசாமி கூறுகையில்," 13ஆண்டுகளாக எங்கள் சபா மூலம், பூக்களை சேகரித்து டன் கணக்கில், பல வகையான பூக்களை, இலவசமாக, திருப்பதிக்கு அனுப்பி வைக்கிறோம். தற்போது ஆந்திரமாநில பிரச்னையால் பூக்கள் அனுப்புவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வேன் மூலம் பூக்களை அனுப்ப ஏற்பாடு நடக்கிறது. கண்டிப்பாக "ஸ்ரைடிக் முடிந்தவுடன், வழக்கம் போல் பிரம்மோற்ச விழாவிற்கு, பழநியிலிருந்து பூக்கள் திருமலைக்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.