கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள மத்தூர்பதியில் புதிதாகக் கட்ட காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கோயில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.