Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கும் ... முத்துநாயகியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா: தங்க கவசத்தில் அம்மன்! முத்துநாயகியம்மன் கோயில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியபட்டிணத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2013
02:10

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் செய்யதலி ஒலியுல்லா தர்காவில்,112ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு இன்று அதிகாலை மிக விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெரியபட்டிணத்தில் மகான் செய்யதலி வலியுல்லாஹ் தர்கா உள்ளது.112 வது ஆண்டின் சந்தனக்கூடு விழா அக்., 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.இன்று அதிகாலை நான்கு மணிக்கு பெரியபட்டணம் ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளிவாசலிருந்து தாரை, தப்பட்டை முழக்கத்துடன் ரதம் சகிதமாக,சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து அதிகாலை ஐந்து மணிக்கு தர்கா வந்தடைந்தது. கூடியிருந்த பக்தர்கள் சந்தனக்கூடு மீது மலர் தூவி வரவேற்றனர். அனைத்து சமுதாய மக்கள் இணைந்து சந்தனக்கூடுவை தோளில் சுமந்து தர்காவிற்கு ஊர்வலமாக தூக்கி வந்தனர். பின் தர்காவில் சிறப்பு துஆ (பிரார்த்தனை)நடந்தது. முன்னதாக டி.வி., மற்றும் திரைப்பட கலைஞர்களின் காமெடி மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. தர்கா மின் விளக்கு அலங்காரத்தால் ஜொலித்தது. ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளி தலைவர் அப்துல் லத்தீப்,ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கபீர், தொழிலதிபர் சிங்கம் பஷீர்,விழா கமிட்டி தலைவர் எம்.சிராஜ்தீன்,செயலாளர் அப்துல் மஜீது, கவுன்சிலர் அபிபுல்லா மற்றும் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள்,இந்து,கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்,இஸ்லாமிய நண்பர் குழு,சுல்த்தானியா சங்க நிர்வாகிகள் செய்தனர்.கீழக்கரை டி.எஸ்.பி.,சோமசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar