பதிவு செய்த நாள்
26
அக்
2013
05:10
பழநி: பழநி கோயிலில் கந்தசஷ்டி விழா, நவ.3ல் காப்புகட்டுதலுடன் துவங்கி, நவ.9 வரை நடக்கிறது. பழநி மலைக்கோயிலில் நடக்கும் ஒரே விழாவான, கந்தசஷ்டி விழா நவ.3ல் பெரியநாயகியம்மன்கோயிலில் காலை 9 மணிக்கு மேல் காப்புகட்டுதல் நடக்கிறது. மலைக்கோயிலில் உச்சிகாலத்தில் மூலவர் ஞானதண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமாரசாமி, சண்முகர், நவ வீரர்களுக்கு காப்புகட்டுதல் நடக்கிறது. முக்கியநிகழ்ச்சியான, நவ.8ல் மாலை 6 மணிக்கு மேல், சூரசம்ஹாரமும், நவ.9ல் மலைக்கோயிலில், காலை 10.30 மணிக்கு மேல், சண்முகர், தெய்வானைக்கும், மாலை 6 மணிக்குமேல் பெரியநாயகியம்மன் கோயிலில், தெய்வானை, முத்துகுமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.