காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், மூலவருக்கு குங்குமப் பூ சாற்று முறை நடந்தது.ராமானுஜர் கோவிலில், மூலவருக்கு புதிய வஸ்திரம் அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜை முடிந்த பின்னர் ராமானுஜர் வழிபாட்டு குழு சார்பில், 108 அந்தாதி பாடப்பட்டது.