Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பசுவந்தனையில் திருக்கல்யாண விழா கோவில் பூட்டை உடைத்து வெள்ளிக்கவசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலையில் மஹா தீபத்தை காண கிரிவல பாதையில் 34 அகன்ற திரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2013
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் கோவிலுக்குள் செல்ல முடியாத பக்தர்கள், மஹா தீபத்தை காண வசதியாக கிரிவலப்பாதை முழுவதும், 34 அகன்ற திரை அமைக்க, போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். திருவண்ணாமலை, கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மஹா தீபம் வரும், 17ம் தேதி மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது ஏற்றப்படவுள்ளது. இந்த தீபம், திருவண்ணாமலை சுற்றியுள்ள, 40 கி.மீ., தூரம் வரை தெரியும். கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் மட்டுமே, பஞ்ச மூர்த்திகள் தரிசனத்துடன், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் அர்த்தநாரீஸ்வரர் நடன காட்சியுடன், மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண முடியும். இதற்கு கோவிலுக்குள், 10 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர். மற்ற பக்தர்கள், இத்தரிசனத்தை காண முடியாது. தீபத் திருவிழாவின் போது, செங்கம் கூட்டு சாலையிலிருந்து, அடி அண்ணாமலை வரை, ஆறு கி.மீ., தூரம் வரை அடுக்கடுக்காக அமைந்துள்ள மலைகளின் அமைப்பு காரணமாக, கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மலையில் ஏற்றப்படும், மஹா தீபம் தெரிவதில்லை. மஹா தீபத்தை, பக்தர்கள் காண்பதற்கு வசதியாக கடந்த, நான்கு ஆண்டுகளாக மாட வீதியில், மூன்று அகன்ற திரைகளும், கோவிலின் வெளி பிரகாரத்தில், மூன்று அகன்ற திரைகளும் அமைத்து, மஹா தீப நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. வரும், 17ம் தேதி கார்த்திகை தீபத்தை ஒட்டி, பக்தர்கள் மஹா தீபம் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவிலில் இருந்து வெளியே வந்து நடனமாடும் அர்த்தநாரீஸ்வரர் காட்சியையும், ஒரே நேரத்தில் காண வசதியாக, போலீஸார், 34 அகன்ற திரை மூலம் ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar