திருக்கார்த்திகைத் திருநாளில் இறைவனுக்கு கார்த்திகைப் பொரி சமர்ப்பித்து வழிபடுவது விசேஷம். வெண்ணீறு பூசிய சிவபெருமானைக் குறிக்கும் வெண்மையான நெற்பொரி, வள்ளல் தன்மை கொண்ட மாவலியைக் குறிக்கும் தேங்காய்த் துருவல், தூய்மையின் அடையாளமாக வெல்லம் ஆகிய மூன்றும் சேர்ந்ததே கார்த்திகைப்பொரி. இதை தூய பக்தியுடன் இறைவனுக்குச் சமர்ப்பித்து வழிபட, நம் வாழ்வு ஒளிமயமாகும்!