மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கிராமப்புர நலிவடைந்த கோவில்களை சீரமைப்பதற்கான நிதியளிப்பு விழாநேற்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்த எம்.எல்.ஏ.சக்தி, சட்டநாதபுரம் சித்திவினாயகர்கோவில், உமையால்பதி பெருமாள்கோவில், தாண்ட வன்குளம் வீரமா காளியம்மன் கோவில், பில்படுகை கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில், பன்னங்குடி காளியம்மன் கோவில், முத்துகிருஷ்ணபுரம் வினாயகர்கோவில் ஆகிய 6 கோவில்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் வீதம் ரூ 3ல ட்சத்திற்கான காசோலையை வழங்கினார். விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிக ள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.