தஞ்சாவூர் பெரியகோவில் தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2013 10:11
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1028–வது சதய விழா நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற ஏப்ரல் மாதத்தில்(சித்திரை மாதம்) தஞ்சை வீதிகளில் பெரியகோவில் திருத்தேர் வலம் வரும்.