Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் தேரோட்டம்: ... புகழ்பெற்ற கல்பாத்தி தேர்திருவிழா துவக்கம்! புகழ்பெற்ற கல்பாத்தி தேர்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3வது புராதன பல்கலைக்கழகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 நவ
2013
10:11

பாட்னா: பீகார் மாநிலத்தில், நாளந்தாவிற்கு அருகில், தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், மூன்றாவது, புராதன பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குப்தர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட, நாளந்தா மற்றும் விக்கிரசீலா என்ற, இரு புராதன பல்கலைக்கழகங்கள், பீகார் மாநிலத்தில் உள்ளன. நாளந்தாவில் இருந்து, 50 கி.மீ.,யிலும், பாட்னாவில் இருந்து, 35 கி.மீ.,யிலும் தெல்ஹடா அமைந்துள்ளது. இப்பகுதியில், 2009ம் ஆண்டு முதல், அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெல்ஹடா பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், பல்கலைக்கழகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில், தொல்லியல் துறை இயக்குனர் அதுல் குமார் வர்மா தெரிவித்தார். பண்டைய காலத்தில், தெல்ஹடா, சோன் நதிக்கரையில் அமைந்திருந்தது. இங்கு, மிகவும் அழகான புத்த மடம் ஒன்று இருந்ததாக, இத்சீன் என்ற, சீன யாத்திரீகர், தன் பயணக்கட்டுரையில் எழுதியுள்ளார். இப்பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், புத்த மடத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; கல் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலைகள், யானைத் தந்தங்களில் செய்யப்பட்ட சிறிய சிற்பங்கள் கிடைத்துள்ளன; காற்று வீசும் போது ஒலி எழுப்பும், தாமிரத்தாலான மணி, மகாலட்சுமி சிற்பம், புத்தர் உள்ளிட்ட ஏராளமான சிற்பங்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில், கோவில் இருந்ததற்கான அடையாளம் உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar