Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் அம்மையார் கோவிலில் ... பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3வது புராதன பல்கலைக்கழகம்! பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான மக்கள் வடம்பிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 நவ
2013
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, 8ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், முக்கிய விழாவான, மஹா ரத தேரோட்டம்நடந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து, 60 டன் எடை கொண்ட, 63 அடி உயரமுள்ள மஹா ரதத்தில், அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின், மஹா ரத தேரோட்டம், பகல், 12:40 மணிக்கு துவங்கியது. கலெக்டர் ஞானசேகரன் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேரோட்டத்தின் போது, பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பியவாறு, வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவக் குழுவினருடன், இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும், பாதுகாப்பு பணியில், 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். வரும், 17ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. வேலூர் ஆவின் நிறுவனத்திடமிருந்து, 3,500 கிலோ நெய்யும், தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 1,000 மீட்டர் காடா துணி, திருப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் 15ம் நுாற்றாண்டு கல்வெட்டை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar