பதிவு செய்த நாள்
28
நவ
2013
10:11
பழநி: பழநி கோவில் உண்டியலில், 1.45 கோடி ரூபாய் வசூலானது. பழநி கோவில் உண்டியல் வசூல், கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. இதில், தங்கம், 652 கிராம், வெள்ளி, 4,714 கிராம், வெளிநாடுகளின் கரன்சி, 916 மற்றும் 1.45 கோடி ரூபாய் இருந்தது. தங்கம், வெள்ளியில் ஆன, தாலி, மோதிரம், ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, கார் போன்றவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.