சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே ஒரு சுவாமிக்கு மட்டும் கஞ்சாவை நைவேத்திய பொருளாக படைத்த காலம் உண்டு. ஐயப்பன் கோயிலின் முன்பு கருப்பசுவாமியும், கடுத்தசுவாமியும் பாதுகாவலர்களாக உள்ளனர். இவர்களில் கடுத்த சுவாமிக்கு கஞ்சா நைவேத்தியமாக படைக்கப்பட்டது. கதலிப்பழம், அவல், பொரி, தேங்காய், சர்க்கரை, முந்திரிப்பழம், கற்கண்டு ஆகியவற்றை தற்போது படைக்கிறார்கள்.