சபரிமலை ஐயப்பன் கோயிலில் மற்றொரு முக்கிய வழிபாடு அங்கப்பிரதட்சணம் எனப்படும் சயனபிரதட்சணம் ஆகும். இது உடல்நோயை மட்டுமின்றி, உள்ளத்து நோயையும் தீர்க்கும் என்பது நம்பிக்கையாகும். மிக நெருக்கடியான கால கட்டங்களில் கூட இந்த நேர்ச்சையை பக்தர்கள் செய்கின்றனர். மாளிகைப்புறத்தம்மன் சன்னதியிலிருந்து பதினெட்டாம் படி வரை இதைச் செய்வார்கள். மாத பூஜைகளின்போது இந்த நேர்ச்சையை நெருக்கடியின்றி செய்துவரலாம்.