சபரிமலையில் மத்திய அதிவிரைவுபடை போலீஸ்: ஓய்வு நேரத்தில் விளக்கு துடைத்து பணிவிடை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2013 05:12
சபரிமலை: சபரிமலை சேவையில் மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர் தங்களை தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளனர். ஓய்வு நேரத்தில் பல்வேறு சேவைகள் மூலம் ஐயப்பனுக்கு பணிவிடை செய்கின்றனர். சபரிமலையில் பாதுகாப்பு பணியில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய ரிசர்வ் போலீசின் அதிரவிரைவு படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் கோயிலின் பாதுகாப்பு பணிகள் மட்டுமல்லமால் கூட்டம் அதிகமாகும் போது கூட்டத்தை கட்டுப்படுத்துவது, 18-ம் படியில் பக்தர்களை ஏற்றுவது போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்கின்றனர். சபரிமலையை சுத்தமாக பராமரிக்க தொடங்கப்பட்டுள்ள புண்ணியம் பூங்காவனம் திட்டத்தில் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டு தினமும் ஒரு மணி நேரம் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்கின்றனர். சபரிமலை சன்னிதானத்தின் முன்புறம் ஒரு அடுக்கு விளக்கு இருந்தது. கார்த்திகை தீபம், மண்டலபூஜை, மகரவிளக்கு போன்ற முக்கியமான நாட்களில் இந்த விளக்கு ஏற்றப்படும். இந்த விளக்கு அழுக்கடைந்து காணப்பட்டது. நேற்று இந்த விளக்கை மத்திய அதிவிரைவு படையினர் கழற்றி எடுத்து சுத்தம் செய்தனர். எலுமிச்சை பழம், தேங்காய் சவுரி போன்றவற்றால் ஒரு மணி நேரம் அதை தேய்த்து கழுவி சுத்தம் செய்து வைத்தனர். இதுபோன்ற பணிகளை சபரிமலையில் செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு மிக பெரிய பாக்கியம் என்றும், இது ஐயப்பனுக்கு செய்யும் சேவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.