Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சனி பிரதோஷம்: தஞ்சாவூர் பெரிய ... தஞ்சை மாரியம்மன் கோவிலில் இன்று லட்ச திருவிளக்கு பூஜை! தஞ்சை மாரியம்மன் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகநாதஸ்வாமி கோவிலில் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2013
10:12

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ராகுதோஷ நிவர்த்தி தலமாக, கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமிகோவில் விளங்குகிறது. இங்கு நாகநாதசுவாமியின் இடப்பாகத்தில் பிறையணியம்மன் சன்னதி உள்ளது. கார்த்திகைத் திங்கள் முழுநிலவு நாளில் இறைவியின் முகத்தில் நிலவொளி படுவது சிறப்பு. சிறப்பு மிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா துவங்கியது. விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், மாலை நாக, கிளி, காளை, பூத, சிம்ம,கைலாச, யானை, அன்ன, குதிரை என பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. கடந்த, 10ம் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 12ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவமும், நேற்று முன்தினம் காலை, 7 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று, 15ம் தேதி காலை, 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் சிறப்பு புஷ்பலங்காரத்தில் வீதியுலா நடந்தது. மதியம், 2 மணிக்கு சூரியபுஷ்கரணி முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின் சூரியபுஷ்கரணியின் நான்கு புறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருக்க, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மதியம், 2.20 மணிக்கு சூரியபுஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. அதே நேரத்தில் சூரியபுஷ்கரணியில் நான்குபுறமும், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் புனித நீராடி, சுவாமியை தரிசனம் செய்தனர். பின் பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடந்தது.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar