Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ... ஆருத்ரா தரிசனம்: தஞ்சை பெரிய கோவில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்! ஆருத்ரா தரிசனம்: தஞ்சை பெரிய கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தன காப்பு கலைப்பு: பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2013
04:12

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜர் பெருமானுக்கு சந்தனகாப்பு கலைத்து,அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்தில் ஐந்தரை அடி உயர பச்சை மரகத கல்லினால் ஆன சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனக்காப்பு கலையப்படும். அதிகாலை 4 மணிக்கு நடராஜர் சன்னதி திறக்கப்பட்டது. புஷ்பாஞ்சலியோடு, மரகத நடராஜருக்கு தீபாராதனை நடந்தது.காலை 10.35 மணிக்கு நடராஜரின் திருமேனி மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு கலையப்பட்டு,நடராஜர் சிலை மீது சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் பூசப்பட்டு 32 வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பச்சை மரகத மேனியாய் அலங்கார கோலத்தில் அருள்பாலித்த நடராஜரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். 100 ரூபாய், 10 ருபாய்,இலவச தரிசனம் என மூன்று பிரிவுகளாக மரத்தடுப்புகள் அமைத்து சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 100 ரூபாய் டிக்கட் வாங்கியவர்களுக்கு சந்தன பாக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது. சன்னதி அருகே சென்று தரிசிக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.மூன்று வரிசை பக்தர்களும் ஒரே இடத்தில் வெளியே நின்று தரிசித்தனர்.

Default Image
Next News

*ஆருத்ரா தரிசனம் விழாவில், மரகத நடராஜர் சந்தனம் களைப்பு,அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுப்பது வழக்கம்.கடந்த ஆண்டைப்போல் நேற்றும் நிகழ்ச்சிகளை போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar