காரமடையில், மார்கழி பிறப்பையொட்டி, திருப்பாவை வழிபாடு, பஜனை திருவீதி ஊர்வலத் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து புறப்பட்ட திருப்பாவை பஜனைக் குழுவினரின் திருவீதி உலா 4 ரத வீதிகளின் வழியாக கோயில் அரங்கில் முடிவுற்றது.