Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவஸ்தான அதிகாரிகளை கேள்விகளால் ... மதுரை மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா துவக்கம்! மதுரை மீனாட்சி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக விளங்கும் இறைவன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜன
2014
10:01

மதுரை: பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக இறைவன் விளங்குகிறான், என, மதுரையில் துவங்கிய தேவாரத் தமிழிசை மாநாட்டில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசினார். முனைவர் சுரேஷ் சிவன் வரவேற்றார். ரமேஷ்குமார் குழுவின் திருமுறை இசை நடந்தது.திருநாவுக்கரசர் இசை விருதுகளை வழங்கி, பொன்னம்பல அடிகள் பேசியதாவது: இயல், இசை, நாடக கலைகள் மூலம் இறைவனை தரிசிக்கிறோம். மார்கழியில் அதிகாலையில் பெண்கள் நீராடி நோன்பில் ஈடுபடுகின்றனர். நல்ல தலைவன் கிடைக்க வேண்டும் என, அவர்கள் தவத்தில் ஈடுபடுகின்றனர்.பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக இறைவன் இருக்கிறான். பழமையை முற்றிலும் புறந்தள்ளி விட முடியாது. பழமை, புதுமையிலுள்ள உட்கூறுகளை கிரகித்து வாழ்வது தான் வாழ்க்கை. பழமையான மக்கும் குப்பையை வயல்களில் இடுவதால், பயிர்கள் நன்கு வளர்கின்றன. பாற்கடலை கடைந்த போது, விஷம் உருவானது. அதை இறைவன் உண்டு, தேவர்களை காப்பாற்றினான். தன்னை தருகிற தியாகமே தலைமை பண்பு. பதவிகள், மாளிகையில் வாழ்வது மட்டும் வாழ்க்கை அல்ல. இதயங்களில் நல்ல எண்ணத்துடன் வாழ வேண்டும், என்றார். தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி மற்றும் பலர் பேசினர். அரசு இசைப்பள்ளி பாலசுப்ரமணியன், மீனாட்சி கோயில் ஓதுவார் நாதன், சங்க இலக்கிய ஆய்வு மைய நிறுவனர் ஜெகதீசன், பாடகர் ரங்கநாயகி, நாதசுர ஆசிரியர் பழனிநாதன், நாதசுர வித்வான் வேல்முருகன், தவில் சண்முகம், மிருதங்கம் சிவக்குமார், அனந்தகிருஷ்ணன் விருது பெற்றனர். இன்றும், நாளையும் (ஜன., 4, 5) மாநாடு நடக்கிறது.       

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar