Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! செம்பொற்ஜோதிநாதர் கோவிலில்வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் செல்லரித்து போன காணிக்கை பணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2014
11:01

வேலூர்: அறநிலையத்துறையினர் அலட்சியப் போக்கால், கோவில் உண்டியலில் இருந்த காணிக்கை, 55,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லரித்து நாசமாகி இருந்தது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, பெரியாகுப்பத்தில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், மாசி மாத திருவிழாவை, 19 கிராம மக்கள் சேர்ந்து நடத்துவர். ஆண்டு தோறும் நடக்கும் கங்கையம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக் கடன் செலுத்துவர்.கடந்த, 2012ம் ஆண்டு பிப்ரவரியில் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. அதன் பின், உண்டியல் திறக்கப்படாததால், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம் நிரம்பி வழிவந்தது.கோவிலில் உண்டியலை திறந்து, அதில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்கும்படி, ஹிந்து சமய அறநிலைத்துறையினருக்கு, பக்தர்கள் சார்பில், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் உண்டியலை திறக்காமல் மெத்தனமாக இருந்தனர். இதனால், உண்டியலை திறந்து பணத்தை எண்ணும்படி, தமிழக முதல்வருக்கு, பக்தர்கள் பேக்ஸ் அனுப்பினர்.இதையடுத்து, கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் தலைமையில், ஆய்வாளர் துரைசாமி மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில், நேற்று, கோவில் உண்டியல் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அப்போது, 55,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்குள் செல்லரித்து, பல துண்டுகளாகி இருந்தது. இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவில் உண்டியலில், ஒரு லட்சத்து, 75,000 ரூபாய் இருந்தது. இதில், 55 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லரித்து விட்டது. ஆட்கள் பற்றாக்குறையாலும், ஒரே செயல் அலுவலர் பல கோயில்களுக்கு பொறுப்பாளராக இருப்பதாலும், குறிப்பிட்ட நேரத்தில் உண்டியலை திறக்க முடியவில்லை. இவ்வாறு கூறினார்.இது குறித்து பக்தர்கள் சபா தலைவர் ஞான தேசிகன் கூறியது:கோவில் உண்டியலை, மூன்று மாதத்துக்கு, ஒருமுறை திறக்க வேண்டும். பல முறை தகவல் கொடுத்தும், அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் திறக்கவில்லை. இதனால், பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் வீணாகியுள்ளது. அலட்சிம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar