Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி விஜயராகவப்பெருமாள் கோவில் ... பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி உற்சவம்! பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாங்கூரில் கருடசேவை உற்சவம்: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2014
05:02

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூரில் 11திவ்யதேச கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களில் இருந்து ஆண்டு தோறும் தை அம்மாவாசைக்கு மறுநாள் பெருமாள் புறப்பட்டு நாராயணபெருமாள் கோவிலில் எழுந்தருள கருடசேவை உற்சவம் நடைபெறும். இவ்வாண்டு தை அம்மாவாசைக்கு மறு நாளான நேற்று இரவு க ருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் புறப்பட்டு11பெருமாளையும் கரு டசேவைக்கு அழைத்து விட்டு நேற்று காலை நாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தார். மதியம் திருநாங்கூர் ஸ்ரீ நாராயணபெருமாள், ஸ்ரீ குடமாடுகூத்தர், ஸ்ரீசெம்பொன்னரங்கர், ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள், ஸ்ரீ புரு÷ஷாத்தமன், ஸ்ரீவைகுந் தநாதர், திருக்காவாளம்பாடி ஸ்ரீ கோபாலன், திருமணிகூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீமாதவ பெருமாள், திருபார்த்தம் பள்ளி ஸ்ரீ பார்த்தசார தி, அண்ணன் கோவில் ஸ்ரீ அண்ணன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும், தாயாருடன் திருநாங்கூர் ஸ்ரீ நாராயணபெருமாள் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 11 பெருமாளும் கோவில் மண்டபத்தில் எழுந்தருள அவர்களுக் கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 2 மணிக்கு பெருமாள்கள் தங்க கருட வாகனத்தில் கோவில் வாசலில் எழுந்தருள திருமங்கையாழ்வார் மங்க ளாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஆயிர பக்தர்கள் 11 பெருமாள்களையும் ஒரே இடத்தில் சேவித்தனர். பின்னர் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி, மாவட்ட கு ழு தலைவர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டார். சீர்காழி டிஎஸ்பி.வெ ங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். மயிலா டுதுறை, சீர்காழியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar