Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வறண்ட நிலையில் ஸ்ரீவி., ... காரமடை அரங்கநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம்! காரமடை அரங்கநாதர் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரரை இசையால் வழிபட்ட காயத்ரி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2014
10:02

மதுரை: மதுரையில் நடந்த இசைவிழாவில், கர்நாடக இசைக்கலைஞர் காயத்ரி வெங்கட்ராகவன், தனது இசைத் திறனால் மீனாட்சி, சுந்தரேஸ்வரரை பாடி வழிபட்டார்,மதுரை சத்குரு சங்கீத சமாஜத்தில் நடந்த இசைவிழாவில் நேற்று அவரது குழுவினரின் கர்நாடக சங்கீத கச்சேரி நடந்தது.முதல் படைப்பாக தியாகராஜர் இயற்றிய கனராக பஞ்சரத்னம், ஆரபி ராகத்தில், சாதிஞ்சென என்று துவங்கி, ஆதிதாளத்தில் தாளகட்டுடன் இருந்தது. தொடர்ந்து முத்துச்சாமி தீட்சிதர் அருளிய, விநாயகர் துதி, மகா கணபதிம் என்று, கவுளை ராகத்தில் மிஸ் ரசாபு தாளத்தில் சிட்டஸ்வரங்களோடு, கற்பனா ஸ்வரங்கள் அழகுற விளங்கியது. அடுத்ததாக, லதாங்கி ராக ஆலாபனையை சிறப்பாக வழங்கிய காயத்ரி, மரிவேற என்று கண்ட சாபு தாளத்தில் துவங்கி பிரபலமான கீர்த்தனையை விறுவிறுப்புடன் தந்தார். தரலோல நீ சாடி தெய்வமு என்ற வரிகளை நிரவல் செய்தபோது, வயலின் வாசித்த சாருமதியும், காயத்ரியும், சிறந்த ராக சஞ்சாரங்களை படைத்து கைத்தட்டல் பெற்றனர்.வரத வெங்கடேச என்ற லதாங்கி ராக கீர்த்தனையை, கற்பனை ஸ்வரங்களும், குறைப்பும் மேலும் அழகுபடுத்தின. தொடர்ந்து, மதுரை சுந்தரேஸ்வரர் மீது பாபநாசம் சிவன் இயற்றிய ஒருதமிழ்ப் பாடல். உன் பெருமையை எவர் அறிவார் என்று துவங்கி, கரஹப்ரியா ராகத்தில், ஆதிதாளத்தில் நல்லிசையாக அமைந்தது. இசையால் சுந்தரேஸ்வரரை வழிபட்ட காயத்ரி, மதுரை மீனாட்சி மீது ஆகிரி ராகத்தில் ஆதி தாளத்தில் மாயம்மா கீர்த்தனை மனம் உருகி பாடினார். மிருதங்கம் ரவியும், கடம் கிருஷ்ணமூர்த்தியும் தங்கள் பணியை செவ்வனே செய்தனர்.அடுத்து, மெயின் ராகமாக காம்போதி ராகத்தை சிறந்த முறையில் ஆலாபனை செய்த காயத்ரி, குரல் வளத்தையும், இசைத் திறனையும் நிரூபித்தார். ஆடும் தெய்வம் நீதானே என்ற தமிழ் கீர்த்தனையை பாடினார் காயத்ரி.காம்போதி ராகத்தில் அமைந்த இந்த பாடலை இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் பாடுவதில்லை. நல்ல ஞானமும், தெளிந்த குரலும் பெற்ற காயத்ரி, கச்சேரியை ரசிகர்களுக்கு உரிய விதத்தில் நடத்திச் சென்றார் எனலாம். வயலின் சாருமதி, கவனிக்கப்பட வேண்டிய இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் என்றால், அது மிகையில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar