Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசாணியம்மன் கோவில் குண்டம் ... ஷீரடி ஆனந்த சாய்பாபாகோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் : இன்று தேர்த்திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 பிப்
2014
10:02

மேட்டுப்பாளையம: காரமடையில் இன்று மாசிமகத் தேர்த்திருவிழா நடக்கிறது. நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க அரங்கநாதப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.காரமடை அரங்கநாதப் பெருமாள் கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பெட்டத்தம்மன் மலையில் இருந்து, ஸ்ரீரங்கநாயகி நாச்சியார் அம்மனை கோவிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது, கோவில் அர்ச்சகர், ராமபாணம் என்ற பெருமாளின் அம்பை கையில் சுழற்றிக் கொண்டு வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு திருமஞ்சனம் சாத்தப்பட்டது.பின், உற்சவமூர்த்தி அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் 4.00 மணிக்கு, மண்டபத்தில் அலங்காரம் செய்த பந்தலில் எழுந்தருளினார். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. புண்ணியவாகம் முடிந்த பின்,பெருமாளுக்கு பூணூல் அணிவித்து, சுவாமிகளுக்கு கங்கணம் கட்டப்பட்டது. பின், அர்ச்சகர்கள் சுவாமிகளின் குலத்தை வாசித்தனர்.தொடர்ந்து, மஞ்சள் இடிக்கும் சடங்கு முடிந்த பின், மாங்கல்ய பூஜை செய்து, ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அர்ச்சகர்கள் மாலையை கையில் பிடித்தபடி ஆடிப்பாடி வந்தனர். பின், சுவாமிக்கு மாலை மாற்றும் சடங்கு நடந்தது. மணக்கோலத்தில் இருந்த சுவாமியின் முன்பு, ஆண்டாள் நாச்சியார் அருளிய வாரணமாயிரம் வாசிக்கப்பட்டது. பின், நெல்பொரியிடுதல், சாற்றுமுறை ஆசீர்வாதத்துடன் தீர்த்தப் பிரசாதம்வழங்கப்பட்டது.திருமணக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதப் பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து மதியம். 3.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar