பதிவு செய்த நாள்
17
பிப்
2014
11:02
அவிநாசி : திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், அவிநாசி அருகே உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலும் ஒன்று. ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடக்கும் தேர்த்திருவிழா, நடப்பாண்டு அடுத்த மாதம் 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக, 14ம் தேதி கிராம சாந்தி உற்சவம் நடக்கிறது. அடுத்த மாதம் 15ம் தேதி கொடியேற்றம், சிம்ம வாகனம், 16ல் பூத வாகனம், 17ல் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சி, 18ல் மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம் மற்றும் யானை வாகன காட்சி ஆகியன நடக்கிறது. 19ம் தேதி காலை 6.00 மணிக்கு மாரியம்மன் தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மதியம் 3.00 மணிக்கும், 20 மற்றும் 21ல் மீண்டும் தேரோட்டம் நடக்கிறது. 22ம் தேதி பரிவேட்டை, குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகன காட்சி ஆகியனவும், 23ம் தேதி மகா தரிசனம், அம்மன் சப்பரத்தில் புறப்பாடும், இரவு மஞ்சள் நீர், அன்ன வாகன காட்சி, கொடியிறக்கம் ஆகியன நடைபெறும்.