Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் உலகளந்த பெருமாள் கோவில் தேர் சக்கரம் உடைந்தது: அறநிலைய துறை அலட்சியம்! உலகளந்த பெருமாள் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோபுரத்தை மறைக்கும் கட்டடங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2014
11:02

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் கோபுரத்தை மறைக்கும் வகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி இந்து முன்னணியினர் கோரிக்கை மனுகொடுத்தனர். தமிழகம் முழுவதும் பாரம்பரியமிக்க திருக்கோயில்களின் அழகையும், புராதனத்தையும் காக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 1994ல் ஒரு உத்தரவை வெளியிட்டது. இதன்படி மதுரை மீனாட்சியம்மன், நெல்லையப்பர் கோயில் போன்ற புராதன கோயில்களின் கோபுரங்களை மறைக்கும் வகையில் அதை விட அதிக உயரத்தில் கட்டடம் கட்ட கூடாது எனவும் குறிப்பாக கோயில் அமைந்த பகுதியில் இருந்து ஒரு கி.மீ.,சுற்றளவிற்குள் ஒன்பது மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக கட்டடம் கட்ட கூடாது எனவும் இதனை கண்காணிக்கும் பணியினை சம்பந்தப்பட்ட மாநகராட்சியினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். ஆனால் 1994க்கு பிறகும் ஏராளமான கட்டடங்கள் நெல்லையப்பர் கோயில் கோபுரங்கள் வெளியே தெரியாதபடி கட்டப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து இந்துமுன்னணி அமைப்பினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி நெல்லை மாநகராட்சியில் நெல்லையப்பர் கோயிலை சுற்றிலும் அனுமதியற்ற கட்டடங்களின் எண்ணிக்கையை கேட்டனர். 1994க்கு முன்பு கட்டட கட்டடங்கள் 22 இருப்பதாகவும், 94 அரசு ஆணைக்கு பிறகு கட்டப்பட்ட கட்டடங்கள் 82 இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன. எனவே அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, நெல்லை மாநகராட்சியின் துணைமேயர் ஜெகநாதனிடம் மனு வழங்கினர். இதுகுறித்து மாவட்ட இந்துமுன்னணி தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி கூறுகையில், மாநகராட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar