பண்ருட்டி: பண்ருட்டி அங்காளம்மன் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம்தேதி காலை அபிஷேகம், மாலை இருளமுகத்துடன் பூவாலக்கப்பரை வீதியுலாவும், 28ம்தேதி அம்மனுக்கு அபிஷேகம், ரணகளிப்பு, வீதியுலா நடந்தது. நேற்றுமுன்தினம் 1ம்தேதி காலை அம்மனுக்கு அபிஷேகம், 1:30 மணிக்கு மயானக்கொள்ளை, வீதியுலா நடந்தது. நேற்று 2ம் தேதி காலை அபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் அங்காளம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இன்று 3ம்தேதி காலை அபிஷேகம், மாலை மஞ்சள் நீராட்டுவிழாவும், நாளை 4ம்தேதி மாலை சாகைவார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு கும்பம் போடுதல் நடக்கிறது.