Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநிகோயில் "வின்ச் இன்று சோதனை ... பாடலீஸ்வரர் கோவிலில்  பிரதோஷ சிறப்பு பூஜை பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கச்சத்தீவு விழா: பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 மார்
2014
10:03

ராமேஸ்வரம்: கச்சச்தீவு அந்தோணியார் சர்ச் விழாவுக்கு, ஒரு பக்தர் ரூ.5 ஆயிரம் மட்டுமே, கொண்டு செல்ல அனுமதிக்கபடுவர் என, ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் தெரிவித்தார். கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்க, 2763 ஆண்கள், 535 பெண்கள், சிறுவர், சிறுமிகள் 134 பேர், 97 விசைப்படகுகளில் இன்று காலை செல்கின்றனர். இவர்களுக்கு ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் நேற்று, அடையாள அட்டை வழங்கினார். பாதிரியார் சகாயராஜ் கூறியதாவது: கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக, அரசு வழங்கிய அசல் அடையாள அட்டையை, அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். ஒரு பக்தர் ரூ. 5000 வரை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர். போதிய உணவு, குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். மார்ச் 16 ல் திரும்பி வரும்போது, தயிர் சாதம், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும், என்றார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக கடலோரக்காவல் படை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திர பாபு, ராமநாதபுரத்தில் கூறியதாவது: கச்சத்தீவுக்கு, படகுகளில் செல்லும் பக்தர்கள், பத்திரமாக பயணிக்க, லைப் ஜாக்கெட் வழங்கப்படும். சர்வதேச கடல் எல்லை வரை, பக்தர்களின் பாதுகாப்புக்கு 6 மரைன் படகுகள் செல்லும். நீரில் தத்தளிப்போரை மீட்க, மரைன் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக, கடலோரக்காவல் எஸ்.பி.,க்கள் மனோகர், வனிதா நியமிக்கப்பட்டுள்ளனர். விழா முடிந்து, திரும்பும் பக்தர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல்வாழ் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம், குருசடைத்தீவு கடல் பகுதியில் மரைன் போலீசார் 20 பேருக்கு, ஸ்கூபா டைவிங் நீச்சல் பயிற்சி இன்றும், நாளையும் அளிக்கப்படவுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar