Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மார்ச், 18 நரசிம்மர் ஸ்வாமி ... மானாமதுரை மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரியத்தை நிறைவேற்றும் கரிய காளியம்மன்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 மார்
2014
11:03

திருப்பூர், முதலிபாளையம் அருகே மாணிக்காபுரம் பிரிவில் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு முன், பழமையான கல் கட்டுமான கோவிலாகும். சிவாலயங்களை அமைத்து வந்த சோழர்கள், முதன்முறையாக அமைத்த காளி கோவில் என்ற பெருமையை பெற்றது.

தல வரலாறு :
சோழ மன்னர் ஒருவர்,படை பரிவாரங்களுடன் ஆட்சி செய்து வருகிறார். நொய்யல் ஆற்றின் கரையில், "அமுக்கியம் என்ற நகரில், சிவாலயம் அமைக்க உத்தரவிடுகிறார்; கோவில் பணிகள் நடந்தன. அதனை பார்வையிட பரிவாரங்களுடன் வருகிறார். ஒவ்வொரு இடங்களிலும்  இரவில் தூங்கும் போது, கனவில் அழகிய சிறு குழந்தை கரிய நிறத்துடன் வருகிறது.
ஒரு நாள் நொய்யல் ஆற்றில் குளித்து விட்டு, பூஜை செய்து விட்டு சிவாலயம் அமைக்கும் இடத்துக்கு வந்த போது, அங்குள்ள வீட்டில், கனவில் பார்த்த சிறுமியை, மன்னன் பார்த்தார். பின் தொடர்ந்து சென்று பார்த்த போது, குழந்தை, நாகலிங்க மரம் அருகே சிறிய கல்லை வைத்து பூஜை செய்து, மாயமாகி விட்டது.
அன்றைய இரவு, மன்னன் கனவில் வந்த குழந்தை, "மன்னனே, இதுவரை உன்னுடன் வந்தேன்; இனி  வர இயலாது; கரியகாளியாக இங்கு எழுந்தருளியிருக்கிறேன் என கூறியுள்ளது. அக்குழந்தை வைத்து வழிபட்ட நாகலிங்க மரம், மறைந்த வீடு கோவிலாக அமைத்துள்ளதாக ஐதீகம். கால மாற்றத்தால் அமுக்கியம், என்ற பகுதி அழிந்து விட்டதாகவும், கோவில் மட்டும் மிஞ்சியதாகவும் கூறுகின்றனர்.
கோவில் சிறப்பு : முழுவதும் கற்களால் அமைக்கப்பட்டு, சுற்று பிரகார சுவர்களில் அழகான சிற்பங்கள், மனித மற்றும் விலங்குகளின் வாழ்வியலை விளக்கும் வகையில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கு செல்லும் நிலவில் கஜலட்சுமி சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பெரிய யானைகள் இரு புறமும் உள்ளதோடு, அகலமான  கல் நிலவு, பூ வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.
அம்மன் சிறப்பு : நினைத்ததை நிறைவேற் றும் கரிய காளியம்மனாக எழுந்தருளியுள்ள அம்மன், பீடம், சிலை வித்தியாசமான அமைப்பில் உள்ளது. தலையில் தீக்குண்ட அமைப்பு உள்ளது. அதில், சூலாயுதமும் இடம் பெற்றுள்ளது. கையில் கீழே பார்த்தபடி சூலாயுதமும், இடது காலில் அரக்கனை மிதித்தவாறே அருள்பாலிக்கிறார்.  பத்மாசன அமைப்பில் அமர்ந்த நிலையில், வலது காலை மடக்கி வைத்தபடி அமர்ந்துள்ளார். தலையில் குண்டத்துடன் அமர்ந்துள்ள ஒரே கோவில் இது மட்டுமே.
உக்கிர காளியாக எழுந்தருளியிருந்தாலும், அம்மன் முகத்தில் சாந்தம் உள்ளது. ஒரு பகுதி சாந்த சொரூபியாகவும், மறு பகுதி ஆக்ரோஷமாகவும் அம்மன் காட்சியளிக்கிறார்.

அண்ணனும், தம்பியும்

வழக்கமாக கோவில்களுக்கு நுழையும் முன்பு இரு புறமும் உள்ள துவார பாலகர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே, மூலவரை தரிசிக்க முடியும். இங்கு சற்று வித்தியாசமாக, முன் மண்டபத்துக்குள் செல்வதற்கு முன், ஒரு புறம் விநாயகரும், மறுபுறம் முருகனும் எழுந்தருளி இருப்பதும் வித்தியாசமாக உள்ளது.
கோவில் எதிரில் பிரமாண்டமான தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றிலிருந்து கோவிலுக்கு வர படித்துறை அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு முன் பகுதியில், பேச்சியம்மன் எழுந்தருளியுள்ளார். பெண் போன்ற முக அமைப்பும், பாம்பு போல் உடல் அமைப்பும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து தலை நாகத்தின் அரவணைப்பில், கன்னிமார் எழுந்தருளியுள்ளனர். அருகில், காவல் தெய்வமான கருப்பணசாமிக்கு தனி சன்னதி உள்ளது.  வில்வ மரம், அரச மரம், வேம்பு மரம், ஆல மரம் ஆகியன கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.
கோவிலுக்கு முதலிபாளையத்திலிருந்து மாணிக்காபுரம்புதூர் செல்லும் டவுன் பஸ் 47 ஏ,பி,சி, 12 ஏ ஆகிய பஸ்கள் செல்லும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar