Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புளியாம்பாறை பகவதி கோவில் தேர் ... திருப்பூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா திருப்பூர் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொன்னையூர் கோவிலில் பங்குனி பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2014
11:03

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே, பிரசித்தி பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள், பல்வேறு பிரச்னைகள் தீரவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் அம்மனுக்கு வேண்டுதல் வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள், ஆண்டு முழுவதும் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும், ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூச்சொரிதல் விழாவும், பொங்கல் விழாவும் கொண்டாடப்படும். இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா, நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், பொன்னமராவதி ஒன்றியத்துக்குட்பட்ட வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, வலையபட்டி, ஆலவயல், வேகுப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து, பக்தர்கள், அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக பலதரப்பட்ட பூக்களை கூடைகளில் ஊர்வலமாக சுமந்து வந்தனர். பலர் பால்குடம் எடுத்து வந்தனர். பக்தர்களுக்கு வழி நெடுகிலும், தனியார் பலர், நீர்மோர், பானகம், பிஸ்கட் போன்றவை வழங்கினர். நேற்று முன்தினம் இரவு முழுவதும், பல்வேறு ஊர்களில் இருந்து, மேள தாளத்துடன் பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு கொண்டு வந்த பூக்களும், பாலும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவையொட்டி, பொன்னமராவதி அரசு போக்குவரத்துக் கழக டெப்போ சார்பில், கோவிலில் இருந்து, சுற்றுப்புற கிராமங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இது தவிர, திருச்சி போன்ற இடங்களில் இருந்து, பொன்னமராவதிக்கு வந்த தொலைதூர பஸ்களையும், கோவில் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்குள் அனுப்பி, பக்தர்களை ஏற்றிச் சென்றனர். இதனால், வெளியூர்களில் இருந்த வந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதினத்தின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar