Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் ... அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா! அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
15 ஆண்டுகளுக்கு பின் பொங்கல்: வயல்வெளியில் பெண்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஏப்
2014
01:04

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில், 15 ஆண்டுகளுக்கு பின், வயல்வெளியில் நடந்த பொங்கல் விழாவில்,ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.இங்கு, வயல்களுக்கு மத்தியில், இரட்டை ஆலமரத்தடி கருப்பசாமி கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில், நெல் அறுவடை முடிந்து, பங்குனிமாதம் பொங்கல் விழா நடைபெறும். சேதாரம், பாதிப்புகள் இன்றி நல்லபடியாக மகசூலை கொடுத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தும்,அடுத்த மகசூலுக்கு நல்ல மழை வேண்டியும், விவசாயிகளும், பொதுமக்களும், அக்கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். கடந்த 15 ஆண்டுகளாக, இத்திருவிழா நின்றுபோனது.தற்போது கடும் வறட்சி நிலவுவதால், விவசாயம் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.இந்நிலையில், மழைவேண்டி மீண்டும் கருப்பசாமிக்கு, பொங்கல் வழிபாடு நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர்.அதன்படி, கடந்த இரு தினங்களுக்கு முன், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.இதை தொடர்ந்து, நேற்று பொங்கல் விழா நடந்தது. நையாண்டி மேளத்துடன் பெண்களை வீடுவீடாக சென்று அழைத்து வந்தனர். 200 க்கு மேற்பட்ட பொங்கல் பானைகளை சுமந்தபடி,பெண்கள் கோயில் மைதானத்திற்கு வந்து, பொங்கல் வைத்தனர். பின்னர் அனைத்து பொங்கல் பானைகளும், சுவாமிக்கு முன் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும், படையல் வழிபாடும் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பெண்கள், பொதுமக்கள் வழிபட்டனர்.ஏற்பாடுகளை,கோயில் நிர்வாகிகள் கோவிந்தராஜ், முத்தாலப்பன், மணிகண்டன், தீபக்குமார், செல்வராஜ், தர்மராஜ், ஊர் நாட்டாமைகள் ஸ்ரீரங்ககுமார், கருப்பையா, ராமர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar