அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2014 02:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்டிற்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன் தினமும் பல மண்டக படிகளில் எழுந்தருள ஒவ்வொரு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். பக்தர்கள் கொடி மரத்தில் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்வர். எட்டாம் நாள் விழாவாக இன்று பொங்கல் பண்டிகை நடக்கும். பெண்கள் விரதமிருந்து பக்தியுடன் கோயில் முன்பு, அம்மனுக்கு பொங்கல் இட்டு வழிபாடு செய்வர். நாளை பக்தர்கள் விரமிருந்து அம்மனுக்கு 51, 101 அக்கினி சட்டிகள் எந்தி நேர்த்தி கடன் செலுத்துவர். இந்த விழாவிற்கு அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் வந்து கலந்து கொள்வர். தினமும் கோயிலின் அருகில் உள்ள மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடந்து வருகிறது. பங்குனி பொங்கலை முன்னிட்டு, எஸ்.பி.கே., பொருட்காட்சி நடந்து வருகிறது.