பதிவு செய்த நாள்
11
ஏப்
2014
12:04
காரிமங்கலம்: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில், சனி மஹா பிரதோஷ வழிபாடு, நாளை நடக்கிறது. இதையொட்டி, இன்று மாலை, 4.30க்கு கணபதி ஹோமமும், 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பலர் செய்து வருகின்றனர். * தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில், சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு, இன்று மாலை, 4.30 மணிக்கு, நந்திக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. * காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவில், சனி மஹா பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது. மாலை, 4 மணிக்கு, கணபதி ஹோமமும், 4.30 மணிக்கு நந்திக்கு, சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, குருக்கள் மோகன்குமார் மற்றும் பலர் செய்து வருகின்றனர். * பாலக்கோடு பால்வண்ணநாதர், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில், அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை, 4.30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.