பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
10:04
மேலூர் : மேலூர் அருகே வெள்ளலூரில் ஆண்டுதோறும் தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு, வெற்றிலை பிரி திருவிழா கொண்டாடுவது வழக்கம். வெள்ளலூர் நாடு என்றழைக்கப்படும் 60 கிராமங்களை சேர்ந்த 22 அம்பலகாரர்கள், தலைமையில் கிராம மக்கள் மந்தையில் ஒன்று கூடினர். கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகளை, மந்தையில் வைத்து, ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டு வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டது. வெற்றிலை வாங்கிய அம்பலகாரர்கள் பொதுமக்களுக்கு பிரித்து கொடுத்தனர். பின், ஒவ்வொருவரும் வீட்டு பூஜை அறையில் வைத்து சுவாமி கும்பிட்ட பின்னர், வயலுக்கு சென்று உழவு பணியை துவங்கினர். இதனால் விவசாயம் செழித்து, எல்லா வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத தவிர தும்பைபட்டி கிராமத்திலும் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகளை மந்தையில் வைக்கப்பட்டது. தும்பைபட்டி, கீழையூர், கீழவளவு உள்பட பல்வேறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மந்தையில் ஒன்று கூடினர். பின்னர் கிராமத்து சார்பில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு முஸ்லிம்கள் தலைமையில், ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்களின் பெயர் வாசிக்கப்பட்டு, வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டது. இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், எல்லா வளமும் பெறுவதற்காக வெற்றிலை பிரி திருவிழா கொண்டாடப்படுகிறது.