கும்பகோணம்: கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்திற்கு சொந்தமானதும் ஒட்டக்கூத்தர், ரவணசித்தர் ஆகியோர் ஜீவசமாதி உள்ள தாராசுரம் வீரபத்திர சுவாமி கோவிலில் பத்ரகாளியம்மன், வீரபத்திர சுவாமியோடு அருள்பாலித்து வருகிறார். ரவணசித்தருக்கு கும்பாபிஷேகம் நடந்து, 48 நாட்கள் நிறைவு பெற்று மண்டலாபிஷேகம் பூர்த்தி நடந்தது. தமிழ்புத்தாண்டின் ஜய வருட பிறப்பு முன்னிட்டு உலக அமைதி, உலக மக்கள் நலன் கருதி சிறப்பு வழிபாடு, 108 கலசாபிஷேகம் நடந்தது. இச்சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.